Thursday, July 28, 2016

என் காதலியின் காதல் மடல்....

என் எதிர்கால மனைவி  எழுதிய காதல் மடல்

💝💝
அஸ்ஸலாமு அலைக்கும்
என் அன்புக் கணவா!! 😍😍
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.நீ எப்படி இருப்பாய் என்று எனக்குத் தெரியாது.😕இந்த நிமிடம் என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்பதும் தெரியாது.😕ஆனால்,என்னிடம் எப்படியும் வருவாய் என்று தெரியும்.😊ஏனென்றால்,இறைவன் உன்னை எனக்காகவும் என்னை உனக்காகவும் படைத்திருக்கின்றான்.💑
நான்தான் உன் அன்பு மனைவி👰.
என் கணவா!!😍நீ இப்பொழுது எந்தப் பெண்ணையாவது காதல்செய்து கொண்டு இருக்கலாம்,அல்லது காதல் தோல்வியில் கவலை அடைந்திருக்கலாம்.பல பெண்கள் உன்னை ஏளனமாக கண்ணீர் விட வைத்திருக்கலாம்😢.கவலைப்படாதே என் உயிரே 😢😍அது என் பிரார்த்தனையாக கூட இருக்கலாம்.😊😊இறைவன் உனக்காக படைக்கப்பட்டவள் நானாக இருக்கும் போது நீ எத்தனை பெண்களை உண்மையாக விரும்பிய போதும் அவர்கள் உன்னை விரும்பமாட்டார்கள்😏.என் உயிர் கணவணே !😍😍!என்னைத்
தவிர எந்தப்பெண்ணும் உன்னை நேசிக்கமாட்டாள்😕.நான் உனக்காக பிறந்தவள்😚.கவலைப்படாதே!😔 என்னிடம் நீ வரும் பொழுது உன்னை அன்பால் அரவணைப்பேன்😍😍.உன் கண்ணீரில் கரைந்த காதலை மறக்கச் செய்வேன்.😍😍
அன்று நீ புரிந்து கொள்வாய் உன் அன்புக் காதலி நான் என்பதை.😊😊
என் அன்புக் கணவா!😍😍
உன் அழகு வேண்டாம்!!👋
உன் பணமும் வேண்டாம்👋
இறைவணுக்கு அஞ்ஞசக் கூடிய நல்ல ஆணாக இருந்தால்போதும்.👍👈
என் உயிர் கணவா!!😍😍
கவலைப்படாதே! 😞
உன் பழைய வாழ்க்கையை மறந்து விடும் அளவு உன்னில் என் அன்பு நிறைவாக இருக்கும்.😍😍உன் எதிர்காலத்தை அழகாக்கும் உன் இன்னொரு உயிர் நான்.😍😍
என் கணவா!😍😍
உன் அருகில் இப்பொழுது நான் இல்லை.😕ஆனால் என்னை நீ சரணடையும் பொழுது உன்னில் இருந்து நான் என்றும் நீங்க மாட்டேன்.👫
மரணம் என்ற ஒன்றைத் தவிர.😢
என் கணவா !😍😍
எங்கிருக்கிறாய்!?😕
உனக்காகவே என்னைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்.😊😊😍
உன் வருகைக்காகவே காத்திருக்கிறேன்.👰
நீயும் நானும் சந்திக்கும்
அந்த அழகிய திருமண நாளை இறைவன் விதியில் எப்பொழுது எழுதிருக்கிறான்?😕
காத்திருக்கிறேன். கணவா!!😍😍
கலங்காமல் நீயும் காத்திரு!😍😍👈👈💖💕 உன் எதிர்கால உன் உயிர் மனைவி😍😚💑💖👈💝....

Monday, July 11, 2016

என்னவளின் காதல்........

என் காதலியின் திருமணம் எதிரே நடந்து
கொண்டிருக்கிறது😞😒

எவனோ ஒருவன் போல் நான்
அமர்ந்து கொண்டிருக்கிறேன்😞
தாடி வளர்க்கும் வயதும் இல்லை😣

போடி என்று
சொல்ல மனமும் இல்லை😘🙁

என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள்
அவரோடு
நின்று
நிழற்படம் எடுத்து கொள்கிறாள்😓😔

கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள்
அவர் ஏதோ
காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டு
கொண்டிருக்கிறாள்😥😖

அழகான கூரை புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல்
இருக்கும் நெற்றியில்
நெற்றிச்சுட்டி😘😒

நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில்
மருதாணி போட்டிருக்கிறாள்😞😘

அதன் வாசம் இங்கு
வரை வீசுகிறது😏

அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை
அணிந்திருக்கிறாள்😐😑

அடிக்கடி என்னையும்
பார்க்கிறாள் யாரோ ஒருவரைப் போல😪
யாருக்கும் தெரியாமல் இருட்டிலே என்னோடு கை
கோர்த்து நடந்தவள்
இன்று ஆயிரம் பேர் முன்பு அக்னியை
சாட்சி வைத்து சுற்றி வருகிறாள்😰😞

ஏமாந்தவன் எதிரிலே இருக்க
இன்னொருவனுடன் உனக்கு திருமணம்😏😣

இதற்கு நான் சாட்சியா என்று அக்னி
கொழுந்துவிட்டு எரிகிறது😖

அருகிலே அவள் சகோதரி இருக்கிறாள்
மணப்பெண்ணை போலவே அவளும் உடை அணிந்து
நிற்கிறாள்😒😣

என் காதலை பிரித்ததில் பெரிதும்
பங்கு இருக்கிறது அவளுக்கு😣

மன்னிக்கவும் அவருக்கு😴
தாய் தந்தையும் இருக்கிறார்கள் நாம் பெற்ற
பெண் எந்த தவறையும் செய்யவில்லை என்ற
மன நிறைவோடு😞😣
அவள் கழுத்திலே தாலி கட்டப்போகும் கணவன்
இருக்கிறான் பாசத்தோடு😘😖
உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் நான்
ஊமையாக இருக்கிறேன்😷😓
அவள் என்னோடு பழகியதை நினைத்து பார்க்கிறேன்
வெகுண்டெழுந்து வருகிறது அழுகை😪😢
அதை கை
குட்டையும் கண்ணாடி வைத்தும் மறைக்கின்றேன் 😞😖
வெள்ளி தட்டில் அட்சதை வருகிறது நானும் அதை
எடுத்துக்கொண்டேன் 😘😣
மந்திரங்கள் ஓத மேலங்கள் ஒலிக்க அவள் தலை
குனிகிறாள் அவர் தாலியை கட்டி விட்டார் 😪😓
நானும்
அட்சதை தூவினேன் எங்கிருந்தாலும் வாழ்க என்ற
எண்ணத்தோடு😪🙏
அவள் என்னை பார்க்கிறாள்
இவனை பெரிதாய் ஏமாற்றி விட்டோம் என்ற
எண்ணத்தில் 😣😓😞
அவள் ஏற்றிய காதல் நாடகத்தில் அழகாய்
நடித்து முடித்து மணமேடை ஏறி விட்டாள்😓😢😣
நடிக்க
தெரியாத நான் வேடிக்கை பார்த்து
கொண்டிருக்கின்றேன்😞😣😖
எல்லாம் முடிந்து விட்டது என்று அவள்
எண்ணலாம் 😞😠
ஆனால் இதுதான் ஆரம்பம் என்று
அவளுக்கு தெரியாது 😃😠
அவள் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூடாது
என்பதற்காகவே அவளை விட்டு விட்டேன் 😣😓
என் மனதில் நிலவை நின்று தொடும் அளவிற்கு
கட்டிய காதல் கோபுரம்😭😥
சித்தெரும்பை விட
சிறியதாக சிதறி போனது 😢😣😕😒
#வாழ்கையின் சோகம் என் முகவரி#😢😖😪 இவன்...

Monday, July 4, 2016

மஸ்ஜிதுன் நபவிக்கு அருகில் ஏற்பட்ட தற்கொலை தாக்குதல்...

புனிதமிக்க மதினா நகரில் சற்றுமுன்னர் தீவிரவாத தற்கொலை தாக்குதல்!!!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசல் ஆன மஸ்ஜீதுன் நபவிக்கு அருகில் தற்கொலை குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது...

இக் குண்டு தாக்குதலில் 4 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உயிர்ழந்து இருப்பதாகவும் 5பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் சவுதி அரபியா தகவல் வெளியிட்டுள்ளது...

மேலும் இத்தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் உரிமை கொள்ளவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....