Wednesday, May 25, 2016

நபி வழியில் குளிப்பு

'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவித்தார்.

Saturday, May 14, 2016

சிந்தனையை தொடும் புனித அல்-குர்ஆனே

மனிதனுக்கு வழிகாட்ட வந்த உத்தம தூதருக்குஅருளப்பட்ட அற்புதங்களில் ஒன்றாகக் காணப்படும் அல்குர்ஆன் ஆனது அகில இரட்சகன் அல்லாஹ்வினால் வானவர் ஜிப்ரீல் (அலை) மூலம் வழங்கப்பட்டது. இவ்வாறு கண்ணியமிக்க இந்த அல்குர்ஆன் ஆனது பல கோணங்களில் ஆய்விற்கு உற்படுத்தப்படுவது அவசிமாகும். அல்குர்ஆனின் மொழியானது மிக இலகுவான மொழியில் அருளப்பட்டுள்ளது. உதாரணமாக இன்று நவீன காலத்தில் பல மொழிகளில் பல புத்தகங்கள் வந்துள்ளபோதிலும் அதை மனனம் செய்யும் வீதம் அறவே இல்லை என்றுதான் கூறவேண்டும். ஆனால் 1400 வருடங்களிற்கு முன்பு அருளப்பட்ட இவ்வேதம் இன்று வரை லலரது உள்ளங்களில் பாதுகாத்து வரப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது. ஒரு மனிதன் தனது வாழ்வில் இந்த அருள் வேதத்தின் அற்புதத்தை அறிய வேண்டுமானால், கிட்டத்தட்ட அவரிடம் 3 பண்புகள் காணப்பட வேண்டும். 1. அல்குர்ஆன் மீது நம்பிக்கையுடன் கூடிய அன்பு (மஹப்பத்) காணப்படல். 2. அல்குர்ஆனை விளங்க வேண்டும் என்ற ஆவல். 3. இஹ்லாஸுடன் கூடிய முயற்சி. இவற்றில் ஒன்றில் மனிதன் நம்பிக்கையற்று விட்டால் அந்த அருள் வேதத்தின் உண்மை தன்மையை சுவைக்க முடியாது. இதனைப் பற்றி ஷஹீத் செய்யித் குதுப் தனது "பீ லிலாலில் குர்ஆன்" எனும் நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார். "குர்ஆனின் நிழலில் வாழ்வது என்பது அருட்கொடையாகும். அந்த அருட்கொடையை சுவைத்தவர் அன்றி வேறு எவறும் அறியமாட்டார்." இவ்வாறு சிறந்த சிறப்பியல்புகள் காணப்படும் அல்குர்ஆனானது மனிதனது ஆய்வுகளை தூண்டும் வகையில் பல இடங்களில் கூறுகின்றது. "அவர்கள் இந்த குர்ஆனை ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்கள் மீது அவற்றிற்குறிய பூட்டுகள் (போடப்பட்டு) இருக்கின்றனவா?" (சூறா முஹம்மத் 24) இவ்வாறு அல்குர்ஆன் மனிதர்கள் மீது வினா தொடுக்கின்றது. ஏனெனில் மனிதன் இதைப் பற்றி சிந்திக்கவும், தனது வாழ்க்கையை சீறிய முறையில் திட்டமிட்டு வழிநடாத்துவதற்கும், மனித சிந்தனைக்கு இத்தூய வேதம் பணிக்கின்றது. அதன் மூலம் படைப்பினங்களின் படைப்பாளன் பற்றியும், படைப்பினங்களை படைத்ததன் நோக்கம் பற்றியும், இந்த அற்புதமிக்க வேதத்தை பற்றியும், மனிதன் கொண்டுள்ள நம்பிக்கைகளை புத்துணர்ச்சி பெறவும், சந்தேகங்களை விட்டு தூய்மையாகவும் வழிவகுக்கின்றது. அன்று அறியாமை கால மக்களை உலகம் போற்றும் உத்தமர்களாக இவ் வேதம் மாற்றியது என்றால் இவ் வேதத்தை கண்ணியப்படுத்த வேண்டிய மிக முக்கிய தேவை இருக்கின்றது. ஆகையால் குர்ஆனை நமது வாழ்விலும் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் அற்புதமான வேதமாக நோக்க வேண்டும். "சிந்தித்து செயல் படுவோம்....!!!!! என்றும் உண்மை சிந்தனை வளர வழிவிடுவோம்...!!!"

மார்க்கத்தை பாதுகாப்போம்.

இன்றைய உலகில் முஸ்லிம் சமூகத்தில் ஒரு சிலர் மார்க்கத்தை வைத்து வீண் குதர்க்கங்களிலும், பிரச்சனைகளிலும் ஈடுபடுகின்றனர். ஒரே இறைவனை ஈமான் கொண்டு இருந்த போதும் மார்க்கத்தின் சிறிய விடயங்களை தலைக்குமேல் தூக்கி பிரச்சினைகளை உண்டாக்கியும், முக்கியமான விடயங்களை மறந்தும் வாழுகின்றனர். இன்று எதை எடுத்தபோதும் அது இப்படி! இது இப்படி! என குதர்க்கங்களை செய்கிறார்களே தவிர தீர்வுகளை மேற்கொள்ளத் தயங்குகின்றார்கள். அபுல் ஹஸன் அலி அந்நபவி அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றார். (1914-2000)-இந்தியா- "இன்று முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்களின் ஸீறா குறித்தும், சுன்னா குறித்தும் வீணான குதர்க்கங்களிலும் தர்க்கங்களிலும் மூழ்கிப்போய் ஸுன்னாவின் உண்மையான உயிரோட்டத்தை உணரும் நிலையை இழந்து விட்டனர். நபி(ஸல்) அவர்களை ஓர் உயிர் வாழும் முன்மாதிரியாக (DYNAMIC ROLE MODEL) எடுத்துக் கொள்வதை விட்டு விட்டு வரட்சியான விவாதங்களில் காலம் கடத்தும் ஒரு தலைமுறை இன்று உறுவாகியுள்ளது." ஆகவே வீண் குதர்க்கங்களில் நமது மார்க்கத்தை விலை பேசாமல் இஸ்லாமிய ஒளிப்பாதையின் பிரகாரம் நமது வாழ்வை அமைத்துக் கொள்ள முயற்சிப்போமாக.....

Friday, May 13, 2016

TRUE LOVE

அழகிய காதல் கதை :
இரண்டு காதலர்கள் பைக்கில்
பயணித்தனர்...
அதிவேகத்தில்
சென்று கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அவன் அவளிடம்
சொன்னான், இந்தா என்னுடைய
ஹெல்மெட் டை நீ அணிந்து கொள்
என்று...!
அவளும்
அதனை வாங்கி அணிந்து கொண்டாள்....!
ஆனால்
அடுத்த நாள் செய்தி பேப்பரில் ''2
பேர்
பயணம் செய்த பைக் லாரியில்
மோதியதில் ஆண் இறந்துவிட்டார்.
பெண்
ஹெல்மெட் அணிந்து கொண்டதால்
சிறிய காயக்களுடன் உயிர்
தப்பினார்''...
அவளோ அவனுடைய
கல்லறைக்கு முன்பு இருந்து கண்ணீர்
விட்டு முச்சுத் திணற திணற
அழும்
போது அவள் தெரிந்து கொள்ளாத
ஒன்று....
''வேகக்கட்டுப்பாடை இழந்தது மட்டுமல்லாமல்
பைக்கின்
ப்ரேக் உடைந்தது''...!
இதை அறிந்து தான் அவன் தன
உயரை பொருட்படுத்தாமல் தன்
காதலிக்கு Helmet
கொடுத்திருக்கிறான்
காதல் உயிரினை விட மேலானது!!!
சில சமயங்களில் உயிருடன்
வாழ்கின்றது...
சில சமயம் இறந்தும் வாழ
வைக்கின்றது...!
இது தான் உண்மையான
காதல்...

உண்மையான விவசாயிகள் யார்????

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல விவசாய விஞ்ஞானிகள்....

ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்..

விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம்.

கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்...

சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்..

இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும்.

தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும்.

புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.

ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும்.

பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.

ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.

கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் நம் பாட்டன்,பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விஷயங்களை ..

#எவனோ_சொன்னது
It's not mine

Tuesday, May 10, 2016

காதல் கவிதைகள்

எல்லோருக்கும் இதயம் நிமிடத்திற்க்கு 72முறை துடிக்கும்...
ஆனால்,
என் இதயம் பல கோடி முறை துடிக்கின்றது....
காரணம் நீ தான் அன்பே!!!!

Love Quotes

படிப்பதற்க்கு பேனையை தூக்கினேன்...
பெண்ணே, என் கைகள் தானாக கிருக்கியது உன் பெயரை....

TRUE LOVE ....
               NEVER END....

Monday, May 9, 2016

காதல் கவிதை

என்றோ, யாரோ உன் கரங்களை பிடிப்பான்...

இன்பம், துன்பம் அறிவான்....

அன்பே அது நான் ஆக இருக்க கூடாதா????