Friday, October 21, 2016

கொட்டும் மழையில்....

அடை மழை வேண்டாம்
நான் நனைய
உன் மீது விழுந்து தெறித்த
சிறு துளி போதும் ....

வானவில் வேண்டாம்
உன் கன்னம் உரசி
பூசும் வெட்கத்தின்
நிறம் போதும் ....

மின்னல்கள் வேண்டாம்
உன் சிரிப்பொளி
சிதறும் வெண்ணொளி
போதும் ....

எதுவும் வேண்டாம்
நான் வாழ
உன் ஒற்றை பார்வை
என் மீது போதும் .....காதல் கிருக்கல்கள்....

No comments:

Post a Comment