*உலக அமைதிக்கு உலகமறையின் உபதேசம்*
🔴அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்யுங்கள். (04:36)
*🔴 தாய் தந்தையரை "சீ" என்று கூறாதீர்கள்*. (17:24)
🔴நம்பிக்கையோடு ஒப்படைக்கப்பட்ட பொருட்களை மோசம் செய்து விடாதீர்கள். (08:27)
🔴அளவுகளிலும், எடைகளிலும் மோசம் செய்து விடாதீர்கள். (06:152)
🔴மதுவும், சூதாட்டமும் தீமையானது, அதில் பெரும் பாவம் இருக்கிறது. (05:91)
🔴பெண்களின் சொத்தின் பங்கை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். (04:07)
🔴மனிதர்களுக்கு இடையிலான குற்றங்களை மன்னித்து விடுங்கள். அவ்வாறு மன்னிப்பதால் உங்கள் குற்றங்களை இறைவன் மன்னிப்பான். (64:14)
🔴 விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்.அதுமானக்கேடான செயலாகும்.மேலும் வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச்செல்லக் கூடியதாகும். (17:32)
🔴குழப்பம் செய்வது கொலையை விடக் கொடியதாகும் . (02:191)
🔴வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை தேவைகளை) அளிக்கிறோம்.(17:31)
🔴இறைவன் மீது பிரியம் உள்ளவர்கள் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிக்கிறார்கள். (76:08)
🔴நீதியை கடைபிடியுங்கள், உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! (நீங்கங்கள் யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ) அவர் செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் சரியே! (04:135)
🔴எவன் ஒருவன் ஒரு மனிதரை அநியாயமாக கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். (05:32)
🔴இறைநம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும், வட்டிக்கு வட்டியாகவும்) இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டி வாங்கி உண்ணாதீர்கள். (03:130)
🔴அல்லாஹ்வின் இறுதி தூதர் (முகம்மது நபி) யிடத்தில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.(33:21)
📖படியுஙகள்!!! 📨பரப்புங்கள......
No comments:
Post a Comment