Sunday, December 4, 2016

தனிமை

நீ..
தந்த காயங்கள்.. ஆறப்போவதுமில்லை..
இனியும்
உன்னோடு சேர்ந்து
நான்
வாழப்போவதுமில்லை... !

தற்போது..
தனிமை
தரும் நிம்மதியை..
இதுவரை..
நீ..
கொடுத்ததும் இல்லை.. !

உன்
மௌனத்தின்
கொடுமையில் இருந்து
விலக நினைத்து..
நானே..
ஊமையாகிப் போனதுதான்
மிச்சம்... !

பழிவாங்க
நீ பயன்படுத்திய..
ஊடகமா... ?
காதல்..
அல்லது
உன் நேசம்..
என்பது ஊடல் எனும்..
வெறும் காமமா... ?

எனது
உறக்கம்..
உனது கனவுகளுக்கான.. களமாகவே..
இருந்தது..
தற்சமயம் அதுவே நரகமுமானது... !

உயிரினங்களின்..
உன்னை...
பார்த்து பிரம்மித்தேன்..
இப்போது..
ஒரு
விலங்கை பார்த்து பயப்படுவதுபோல்
ஓடுகிறேன்...

வார்த்தையாலும்..
கொலை செய்ய பழகிவிட்டாய்.. ஆதலால்.. ,
தற்க்கொலையில் இருந்தும் தப்பிவிட்டேன்... !

இப்போது..
அழியாத நினைவுகளுடன்..
தனிமையின் காதலனாகவும்
மாறிவிட்டேன்.. !

தீப்பட்ட காயம் கூட..
காலப் போக்கில்
ஆறிவிடும்..
ஆனால்..
வார்த்தையால் சுட்ட காயம்..
உடல் மண்ணுடன் சேரும்
வரை
மனதினுள்..
எரிந்து கொண்டுதான் இருக்கும்..
அணைக்க முடியாத..
எரிமலையாய்... !!

Saturday, November 12, 2016

அமுத மொழி

நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று காரியங்கள் குறித்து நான் உறுதி கூறுகின்றேன்.

*1. நீங்கள் கொடுக்கும் தர்மம் ஒரு போதும் உங்கள் செல்வத்தை குறைக்காது.*

*2. எப்போதெல்லாம் நீங்கள் ஒருவரை மன்னித்து விடுகின்றீர்களோ, அப்போதெல்லாம் உங்களது கௌரவத்தை அல்லாஹ் அதிகப்படுத்துகின்றான்.*

*3. எவர் ஒருவர் அல்லாஹ்வுக்காக பணிவாக உள்ளாரோ, அவரின் தகுதியை அல்லாஹ் உயர்த்துகின்றான்.*

நூல்: அஹ்மத் 4:231

Monday, October 24, 2016

நாங்க அப்பவே அப்படி, இப்போ கேகவா வேணும்

எனக்கு படித்து தந்த கணித ஆசிரியரை இன்று பாதையில் கண்டேன்..
அவர் என்னிடம் "சம்பத் வங்கி எங்கே இருக்கிறது?" என கேட்டதற்கு நான்
"இங்கிருந்து வட கிழக்காக ஐம்பது மீற்றர் சென்று tan 45 பாகையில் திரும்பி இருபது மீற்றர் சென்று பைதகரஸ் தேற்றத்தை பாவித்து செம்பக்கம் வழியாக செல்லுங்கள்.." என்றேன்..😂

#கொய்யால_நான்_படிக்குற காலத்துல_என்ன_பாடு_படுத்திருப்பான்..😁

😂😂😂
🔜
By:- AFN Creation™...
🌐www.smslogic.blogspot.com

Sunday, October 23, 2016

Feeling good

*ஆம்பிளை மனசு* 👨❤
தர்மஆஸ்பத்திரி மாதிரி உள்ளே என்ன நடக்குதுனு ஊருக்கே தெரியும்..........!!!

ஆனால்

*பொம்பளை மனசு* 👩❤
அப்போலோ ஆஸ்பத்திரி மாதிரி என்ன நடக்குது?எப்படி இருக்குது யாருக்குமே தெரியாது.............!!!!!
😂😂😂

Friday, October 21, 2016

கொட்டும் மழையில்....

அடை மழை வேண்டாம்
நான் நனைய
உன் மீது விழுந்து தெறித்த
சிறு துளி போதும் ....

வானவில் வேண்டாம்
உன் கன்னம் உரசி
பூசும் வெட்கத்தின்
நிறம் போதும் ....

மின்னல்கள் வேண்டாம்
உன் சிரிப்பொளி
சிதறும் வெண்ணொளி
போதும் ....

எதுவும் வேண்டாம்
நான் வாழ
உன் ஒற்றை பார்வை
என் மீது போதும் .....காதல் கிருக்கல்கள்....

Friday, October 7, 2016

உலக அமைதிக்கு உலகமறையின் உபதேசம்

*உலக அமைதிக்கு உலகமறையின் உபதேசம்*
🔴அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்யுங்கள். (04:36)
*🔴 தாய் தந்தையரை "சீ" என்று கூறாதீர்கள்*. (17:24)
🔴நம்பிக்கையோடு ஒப்படைக்கப்பட்ட பொருட்களை மோசம் செய்து விடாதீர்கள். (08:27)
🔴அளவுகளிலும், எடைகளிலும் மோசம் செய்து விடாதீர்கள். (06:152)
🔴மதுவும், சூதாட்டமும் தீமையானது, அதில் பெரும் பாவம் இருக்கிறது. (05:91)
🔴பெண்களின் சொத்தின் பங்கை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். (04:07)
🔴மனிதர்களுக்கு இடையிலான குற்றங்களை மன்னித்து விடுங்கள். அவ்வாறு மன்னிப்பதால் உங்கள் குற்றங்களை இறைவன் மன்னிப்பான். (64:14)
🔴 விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்.அதுமானக்கேடான செயலாகும்.மேலும் வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச்செல்லக் கூடியதாகும். (17:32)
🔴குழப்பம் செய்வது கொலையை விடக் கொடியதாகும் . (02:191)
🔴வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை தேவைகளை) அளிக்கிறோம்.(17:31)
🔴இறைவன் மீது பிரியம் உள்ளவர்கள் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிக்கிறார்கள். (76:08)
🔴நீதியை கடைபிடியுங்கள், உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே! (நீங்கங்கள் யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ) அவர் செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் சரியே! (04:135)
🔴எவன் ஒருவன் ஒரு மனிதரை அநியாயமாக கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் எல்லோரையும் கொலை செய்தவன் போல் ஆவான். (05:32)
🔴இறைநம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும், வட்டிக்கு வட்டியாகவும்) இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டி வாங்கி உண்ணாதீர்கள். (03:130)
🔴அல்லாஹ்வின் இறுதி தூதர் (முகம்மது நபி) யிடத்தில் திட்டமாக உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.(33:21)

📖படியுஙகள்!!! 📨பரப்புங்கள......

Thursday, October 6, 2016

பலஸ்தீனே சிறுவன்...

ந்தியாவைச் சேர்ந்த இமாம் ஒருவர் பலஸ்தீன் சென்றபோது அங்குள்ள 10 வயது சிறுவனை அழைத்து நீ என்னுடன் இந்தியாவுக்கு வருகிறாயா என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன், இந்தியாவில் என்ன கிடைக்கும் என்று கேட்டான்.

அங்கு நல்ல சுவையான உணவு, துணி, நிம்மதியான தூக்கம் எல்லாம் கிடைக்கும் என்று அந்த இமாம் தெரிவித்தார்.

அதற்கு அந்தச் சிறுவன், "எனக்கு அங்கு சஹீத் அந்தஸ்து கிடைக்குமா?

அல்லாஹ் இந்தப் பூமியில் அந்த அந்தஸ்த்தை எங்களுக்கு மட்டுமே கொடுத்துள்ளான். அது வேறெங்கும் கிடைக்க வாய்ப்பில்லை" என்று தெரிவித்தான்.

சிறுவனின் பதிலைக் கேட்ட இமாம் கண்கலங்கினார்.

சிறுவனின் ஈமானைப் பாருங்கள். பலஸ்தீனர்கள் அல்லாஹ்வுக்காக தன் உயிரை விடுவதற்கு எப்பொழுதும் தயராக உள்ளனர்...

படித்ததில் வலித்தது...